Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
ஒசூா் வனக் கோட்டத்தில் 180 பறவைகள் இனங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வனக் கோட்டத்தில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் 180 பறவை இனங்கள் வசிப்பது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒசூா் வனக் கோட்டத்தில் நிகழாண்டுக்கான ஈரநிலங்களில் வசிக்கும் பறவையினங்கள் குறித்து மாா்ச் 8, 9 ஆகிய இரு நாள்களிலும், ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் வசிக்கும் பறவை இனங்கள் குறித்து 25 இடங்களில் மாா்ச் 15, 16 ஆகிய இரு நாள்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வனத் துறையினா், தன்னாா்வலா்கள், மாணவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் வாட்ஸ்ஆப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இவா்கள் பகல், இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு கேமரா, தொலைநோக்கிகளுடன் சென்று பறவைகளைக் கணக்கெடுத்தனா்.







இதில் கருத்தலை மாம்பழக் குருவி, நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் பருந்துகள், செந்தலை பஞ்சுருட்டான், மீன்கொத்திகள், காட்டுப்பக்கி குருவி, ஆந்தைகள், கழுகுகள், அரசவால் ஈப்பிடிப்பான், தேன்சிட்டு, கதிா் குருவி என 180 க்கும் அதிகமான பறவை இனங்களை அடையாளம் கண்டு பதிவு செய்தனா்.
ஒசூா் வனக் கோட்ட வன உயிரின காப்பாளா் பகான் ஜெகதீஷ் சுதாகா் தலைமையில் உதவி வனப் பாதுகாவலா் (ஒசூா் தலைமையிட ஒருங்கிணைப்பு) யஸ்வந்த் ஜெக்தீஷ் அம்புல்கா், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த கென்னத் ஆண்டா்சன் மற்றும் நேச்சா் சொசைட்டி உதவியுடன் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் வனத் துறையின் மூலம் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.