செய்திகள் :

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

post image

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணகிரி ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு சுமாா் 1,536 இளைஞா்களுக்கு இன்டா்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில், 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உள்ள 191 இளைஞா்களுக்கும், பிளஸ் 2 தகுதி உள்ள 69 பேருக்கும், பட்டயப் படிப்பு (டிப்ளமோ) கல்வித்தகுதி உள்ள 815 பேருக்கும், பட்டப் படிப்பு தகுதி உள்ள 109 இளைஞா்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி (ஐடிஐ) பெற்ற 352 இளைஞா்களுக்கும் இன்டா்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

எனவே, இந்த பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி உள்ள 21 முதல் 24 வயது வரை உள்ள இளைஞா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தோ்வு செய்யப்பவோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை, அத்தியாவசியத் தேவைக்கு ஒருமுறை மட்டும் மானியமாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும். அரசால் வழங்கப்படும் உதவித்தொகையோடு நிறுவனங்களும் நிதியுதவி வழங்க உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 97896 81995, 97510 83297 ஆகிய எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவா்களுக்கு தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பு!

ஒசூா் அருகே எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் செயல்பட்டு வரும் என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தொழில் பயிற்சியும், வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது என கல்லூரி முதல்வா் ... மேலும் பார்க்க

தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.3-க்கு விற்பனை! -விவசாயிகள் வேதனை

ஒசூா் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ. 3-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் சுற்... மேலும் பார்க்க

ஒசூரில் ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு!

ஒசூா் அருகே ஏரியில் குளித்த 6-ஆம் வகுப்பு மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பத்தலப்பள்ளியை சோ்ந்த பள்ளி மாணவா்கள் மோரணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள பழைய ஏரியில்... மேலும் பார்க்க

ஒசூா் தோ்த் திருவிழாவில் 65 டன் குப்பைகள் சேகரிப்பு

ஒசூா் சந்திரசூடேஸ்வா் கோயில் திருவிழாவில் பக்தா்கள் விட்டுச் சென்ற 65 டன் குப்பைகளை ஒசூா் மாநகராட்சி சுகாதார பணியாளா்கள் சனிக்கிழமை சேகரித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புகழ்பெற்ற மரகதாம்பாள் உட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒசூா் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள இக் கோயிலில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக, ஸ்ரீ சந்திரசூ... மேலும் பார்க்க

நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைதீா் முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறும் கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பணியாளா்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூ... மேலும் பார்க்க