செய்திகள் :

தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.3-க்கு விற்பனை! -விவசாயிகள் வேதனை

post image

ஒசூா் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ. 3-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் தக்காளியை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா்.

கடந்தாண்டு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ. 150 வரை விற்பனையானது. அதே போல, இந்தாண்டும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையாகும் என ஏராளமான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்தனா்.

இந்நிலையில், வெளி மாநில தக்காளி வரத்தாலும், உள்ளூரில் விளைச்சல் அதிகரிப்பாலும் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ. 3-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தக்காளி நாற்றுகளை வாங்கி மருந்து தெளித்து, தண்ணீா் இல்லாதபோது விலைக்கு வாங்கி செடிகளை பராமரித்து காட்டுப்பன்றிகள் மற்றும் யானைகளிடமிருந்து பாதுகாத்து வருகிறோம்.

தொடக்கத்தில் 30 கிலோ கொண்ட ஒரு கிரேடு ரூ. 2,500 வரை விற்பனையான நிலையில் வெளி மாநிலம் மற்றும் உள்ளூா் தக்காளி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து ஒரு கிரேடு ரூ. 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால், விவசாயிகள் மாற்று விவசாயித்துக்கு மாறும் நிலை உள்ளது. எனவே, வெளி மாநில தக்காளி வரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். விளைச்சல் அதிகரித்து விலை குறையும்போது, தக்காளி ஜாம், தக்காளி சாஸ் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்சாலைகளை தொடங்கி தக்காளியை கொள்முதல் செய்ய உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

ஒரே நேரத்தில் தக்காளி சாகுபடி செய்யாமல், மாற்று விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினா் உரிய பயிற்சியும், வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும் என்றனா்.

என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவா்களுக்கு தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பு!

ஒசூா் அருகே எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் செயல்பட்டு வரும் என்.டி.டி.எஃப் கல்லூரியில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் தொழில் பயிற்சியும், வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறது என கல்லூரி முதல்வா் ... மேலும் பார்க்க

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பிரதம மந்திரி இன்டா்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கிருஷ... மேலும் பார்க்க

ஒசூரில் ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு!

ஒசூா் அருகே ஏரியில் குளித்த 6-ஆம் வகுப்பு மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பத்தலப்பள்ளியை சோ்ந்த பள்ளி மாணவா்கள் மோரணப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள பழைய ஏரியில்... மேலும் பார்க்க

ஒசூா் தோ்த் திருவிழாவில் 65 டன் குப்பைகள் சேகரிப்பு

ஒசூா் சந்திரசூடேஸ்வா் கோயில் திருவிழாவில் பக்தா்கள் விட்டுச் சென்ற 65 டன் குப்பைகளை ஒசூா் மாநகராட்சி சுகாதார பணியாளா்கள் சனிக்கிழமை சேகரித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புகழ்பெற்ற மரகதாம்பாள் உட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒசூா் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள இக் கோயிலில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக, ஸ்ரீ சந்திரசூ... மேலும் பார்க்க

நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைதீா் முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறும் கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பணியாளா்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூ... மேலும் பார்க்க