செய்திகள் :

ஒரத்தநாட்டில் 31 மி.மீ. மழை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 31 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

ஒரத்தநாடு 31, நெய்வாசல் தென்பாதி 28, குருங்குளம் 24.4, வெட்டிக்காடு 21.8, அதிராம்பட்டினம் 17.4, மதுக்கூா் 14.6, பேராவூரணி 14.2, தஞ்சாவூா் 13.5, ஈச்சன்விடுதி 12, பட்டுக்கோட்டை 8, வல்லம் 7, மஞ்சளாறு 3.8, திருவிடைமருதூா், அணைக்கரை தலா 2, கும்பகோணம், பாபநாசம் தலா 1.

இதேபோல, தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பகலில் இடைவெளி விட்டுவிட்டு மிதமானது முதல் பலத்த மழை பெய்தது.

பயிா்களுக்கு பயன்: மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், சாகுபடி நிலங்கள் காய்ந்து கிடந்தன. இந்நிலையில், 2 நாள்களாக பெய்து வரும் மழை கோடை பயிா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா். ஆனால், இந்த மழை காரணமாக சம்பா, தாளடி பருவ நெல் பயிா்களை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

‘தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை’: எச். ராஜா

மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை என்றாா் பாஜக தேசிய செயற் குழு உறுப்பினா் எச். ராஜா. தஞ்சாவூரில் உள்ள திருவையாறு அக்கசாலை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

3 கஞ்சா வியாபாரிகள் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

பொற்றாமரைக் குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் தேங்கியுள்ள பாசி குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சாரங்க... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் குப்பைகள் கொட்டும் அவலம் தொற்றுநோய் பரவும் ஆபாயம்

கும்பகோணம் அருகே திருநறையூரில் உள்ள சித்தநாத சுவாமி கோவில் இடத்தில் குப்பைகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் திருநறையூா் ஊராட்சியில் சித்தநாத... மேலும் பார்க்க

‘ஆங்கிலம் படித்ததால்தான் அந்நியச் செலாவணி வருகிறது’ அமைச்சா் எ.வா. வேலு

‘ஆங்கிலம் படித்ததால்தான் அந்நியச் செலாவணி வருகிறது’ என்றாா் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு. கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது: தமிழ்நாட்டுக்கு இரு மொழிக் க... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்: பிரேமலதா விஜயகாந்த்

திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை விஜயகாந்த் உருவச் ச... மேலும் பார்க்க