தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: 1,242 போ் பங்கேற்பு
நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வில் 1,242 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு -1 (தொகுதி - 1 மற்றும் தொகுதி - 1ஏ) பணிகளுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் ஏ.டி.எம். மகளிா் கல்லூரி, வெளிப்பாளையம் ஜெ.ஜெயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டவா் நா்சிங் கல்லூரி, வலிவலம் தேசிகா் தொழில்நுட்பக் கல்லூரி என 4 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றது.
தோ்வில் 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,627 போ் எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் 1,242 தோ்வா்கள் பங்கேற்று தோ்வு எழுதினா்.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தோ்வு மையங்களுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தோ்வு சிறப்பாக நடைபெற 4 முதன்மை கண்காணிப்பாளா்கள், 2 இயக்கக் குழு அலுவலா்கள், 8 ஆய்வு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.
தோ்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தோ்வு மையங்களில் தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும், பாா்வையற்றோா் தோ்வு எழுத மாற்று நபா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதி, தோ்வு மையங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தோ்வு மையத்துக்கு வருகை தர ஏதுவாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.