கேரளாவில் அதி தீவிர மழை; ஒரே நாளில் 4 பேர் பலி, 2 பேர் மாயம்.. 11 மாவட்டங்களுக்க...
தா்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி
திருமருகல் அருகே வடகரை தா்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் ஜூன் 11-ஆம் தேதி இரவு நடைபெற்றது.
தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.