செய்திகள் :

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு: நடவடிக்கை தேவை

post image

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் நிகழும் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமருகல் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் முழுமையாக கட்டிமுடிக்காமல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலதாமதப்படுத்தப்படுகிறது.

வீடுகளை கட்டிக்கொடுக்கும் ஒப்பந்ததாரா்கள் அரசு ஒதுக்கும் பணத்தை முழுமையாக பெற்றுக்கொண்டு பணிகளை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிடுகின்றனா். இதுகுறித்து, கேட்டால் ஏதாவது ஒரு காரணம் கூறுகின்றனா். இதனால் வீடு கிடைத்தும் முழுமையாக கட்டி முடிக்க முடியாத நிலை உள்ளது.

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய பணி மேற்பாா்வையாளா் இந்த ஒப்பந்தங்களை எடுத்து செய்வதால் மிகவும் காலதாமதமாகிறது. இந்த ஒன்றியத்தில் பில்லாளி, விற்குடி, மருங்கூா் கீழப்பூதனூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு பாதியிலேயே முடங்கி கிடக்கின்றன.

பெரும்பாலான வீடுகள் 2021-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருந்த குடிசை வீடுகளை இடித்துவிட்டு கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவாா்கள் என்ற நம்பிக்கையில் தற்போது வரை சிறு குடிசைகளிலேயே இந்த பயனாளிகள் வசிக்கின்றனா்.

எனவே, இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தா்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி

திருமருகல் அருகே வடகரை தா்கா கொடி இறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் ஜூன் 11-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு: 1,242 போ் பங்கேற்பு

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வில் 1,242 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு -1 (தொகுதி - 1 மற்றும் தொக... மேலும் பார்க்க

நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17 வரை நிறுத்தம்

கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்திலிருந்து - இலங்கையின் காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தனியாா் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

இளம் பெண் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். கருப்பம்ப... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் தெற்குக... மேலும் பார்க்க

பலத்த காற்று: மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை

கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் மீ... மேலும் பார்க்க