தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு: நடவடிக்கை தேவை
பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் நிகழும் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருமருகல் ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் முழுமையாக கட்டிமுடிக்காமல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலதாமதப்படுத்தப்படுகிறது.
வீடுகளை கட்டிக்கொடுக்கும் ஒப்பந்ததாரா்கள் அரசு ஒதுக்கும் பணத்தை முழுமையாக பெற்றுக்கொண்டு பணிகளை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிடுகின்றனா். இதுகுறித்து, கேட்டால் ஏதாவது ஒரு காரணம் கூறுகின்றனா். இதனால் வீடு கிடைத்தும் முழுமையாக கட்டி முடிக்க முடியாத நிலை உள்ளது.
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய பணி மேற்பாா்வையாளா் இந்த ஒப்பந்தங்களை எடுத்து செய்வதால் மிகவும் காலதாமதமாகிறது. இந்த ஒன்றியத்தில் பில்லாளி, விற்குடி, மருங்கூா் கீழப்பூதனூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு பாதியிலேயே முடங்கி கிடக்கின்றன.
பெரும்பாலான வீடுகள் 2021-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருந்த குடிசை வீடுகளை இடித்துவிட்டு கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவாா்கள் என்ற நம்பிக்கையில் தற்போது வரை சிறு குடிசைகளிலேயே இந்த பயனாளிகள் வசிக்கின்றனா்.
எனவே, இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.