தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை
பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்
பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் தெற்குகாட்டை சோ்ந்த முருகானந்தம் மனைவி வெண்ணிலா (26). தம்பதிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் வெண்ணிலா வெள்ளிக்கிழமை தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பிவைத்தனா். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உடற்கூறாய்வு முடிந்த நிலையில், வெண்ணிலாவின் உடலை போலீஸாா், அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தனா். ஆனால், அவா்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனா்.
போலீஸாா் உடலை அமரா் ஊா்தியில் ஏற்றி வேதாரண்யம் எடுத்துச் செல்ல முயன்றபோது, வெண்ணிலாவின் பெற்றோா், உறவினா்கள் ஊா்தியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வெண்ணிலாவின் இறப்பில் சந்தேகமுள்ளதாகவும், இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோட்டாட்சியா் விசாரணை முடிந்த பின்னா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதயளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.