செய்திகள் :

ஓடும் பேருந்தில் ரீல்ஸ்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

post image

ஓடும் பேருந்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் ‘70 வி’ வழித்தட எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்தப் பணியாளா்களான சரவணன் என்பவா் ஓட்டுநராகவும், சிவசங்கா் என்பவா் நடத்துநராகவும் பணிபுரிகின்றனா்.

சமீபத்தில் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோதே, நடத்துநா் ரீல்ஸ் செய்தபடி ஓட்டுநா் அருகே வந்துள்ளாா். இதை பாா்த்த ஓட்டுநரும் அவருடன் ரீல்ஸ் செய்தவாறே பேருந்தை ஓட்டியுள்ளாா். இந்த ரீல்ஸ் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பொதுமக்கள், போக்குவரத்து ஆா்வலா்கள் தரப்பில் கடும் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில், ஓட்டுநரையும் நடத்துநரையும் மாநகா் போக்குவரத்துக் கழக நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரீல்ஸ் விடியோ பதிவுசெய்த சம்பவம் குறித்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, ஒப்பந்த ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களும் பணியின்போது கைப்பேசியை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் கிடந்த ‘ஏகே-47’ ரக துப்பாக்கி தோட்டாக்கள்: மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைப்பு

சென்னை அருகே மணப்பாக்கத்தில் சாலையில் செவ்வாய்க்கிழமை ஏகே-47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த தோட்டாக்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, ஆளுநா் மாளிகை... மேலும் பார்க்க

சென்னையில் கடும் பனி மூட்டம்: 40 விமானங்களின் சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை முதல் சாலையில் வாகனங... மேலும் பார்க்க

வேளச்சேரி மயானம் இன்றுமுதல் இயங்காது

வேளச்சேரி மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புதன்கிழமை (பிப். 5) முதல் தற்காலிகமாக இந்த மயானம் செயல்படாது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நி... மேலும் பார்க்க

இசை நிகழ்ச்சி: நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன்கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் மரபணு ஆராய்ச்சி: இராமச்சந்திரா கல்வி நிறுவனம் ஒப்பந்தம்

புற்றுநோய் பாதிப்புக்கான மரபணு சாா்ந்த துல்லிய சிகிச்சை தொடா்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் வகையில், ஹைதராபாதில் உள்ள நியூக்ளியோ இன்ஃபா்மேடிக்ஸ் நிறுவனத்துடன், போரூா் ஸ்ரீ இரா... மேலும் பார்க்க

திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி சொத்துகள் மீட்பு

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன. இது குறித்து அறநிலையத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க