செய்திகள் :

ஓமந்தூரில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழுக் கூட்டம்!

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இருவரும் நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வது, பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் (ஜூலை 8) ஆம் தேதி ஒமந்தூரிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வந்தனர்.

மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை முதலே வரத் தொடங்கிய செயற்குழு உறுப்பினர்கள்: வரத் தொடங்கினர்.

இதற்காக மண்டப வாயிலில் செயற்குழு உறுப்பினர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் கூட்ட அரங்கத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் இதைத் தொடர்ந்து முற்பகல் 11.20 மணிக்கு கூட்ட அரங்குக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்தார். அவரை செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலர் முரளிசங்கர், இணைப் பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக முன்னாள் மாநிலத் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.

மாநில மகளிர் சங்கச் செயலர் சுஜாதா செயற்குழுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், “மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் இன்று பாட்டாளி மக்கள் கட்சியாக மாறி, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் மாநாட்டுக்குப் பின்னர் சிலர் முகநூலில் கம்பு சுற்றி வருகின்றனர்” என்றார்.

The state executive committee meeting of the Patali Makkal Katchi began on Tuesday morning in Omandur, Tindivanam taluk, Villupuram district.

இதையும் படிக்க: கடலூர் ரயில் விபத்து: மாவட்ட ஆட்சியர் மீது குற்றம்சாட்டும் தெற்கு ரயில்வே

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க