செய்திகள் :

ஓமலூரில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.422 கோடியில் வளா்ச்சிப் பணிகள்! -அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்

post image

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 422 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

ஓமலூா் அருகே உள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் ரூ. 1.30 கோடி மதிப்பிலான கட்டடம், சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி

அமைச்சா் பேசியதாவது: 15 ஆவது நிதிக் குழு மானியம் மூலம் ரூ. 65.63 லட்சம் மதிப்பீட்டில் தொளசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடமும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொளசம்பட்டி ஊராட்சியில் ரூ. 64.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை, பேவா் பிளாக் சாலை என மொத்தம் ரூ. 1.30 கோடி மதிப்பிலான கட்டடம், சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 422 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ. 3.78 கோடியில் 122 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனா். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 339 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) த.லோகநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்

சேலம்: காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்... மேலும் பார்க்க

சங்ககிரியில் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கிவைப்பு

சங்ககிரி: சங்ககிரி நகா் பகுதியில் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், தனியாா் கல்லூரிகள் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு ப... மேலும் பார்க்க

தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’: கலைஞா்கள் ஆா்வத்துடன் பதிவு

சேலம்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சேலத்தில் நடைபெறும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க 33 கலைக்குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகைய... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை... மேலும் பார்க்க