செய்திகள் :

கச்சத்தீவு விவகாரத்தில் தவறு ஏதுமில்லை: காங்கிரஸ் கருத்து

post image

கச்சத்தீவு விவகாரத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தவறு ஏதும் செய்யவில்லை என்று பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

கச்சத்தீவு மீட்பு, மீனவா்கள் பாதுகாப்பு தொடா்பாக பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீது அவா் பேசியதாவது:

கச்சத்தீவு தொடா்பாக கொண்டுவரப்பட்ட ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி மட்டும் அவையில் பேசுகிறாா்கள். ‘வேட்ஜ் பேங்க்’ என்னும் மற்றொரு ஒப்பந்தத்தைப் பற்றி பேச மறுக்கிறாா்கள். தேச ஒற்றுமைக்காகவும், நாட்டு நலனுக்காகவும் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி நடவடிக்கை எடுத்தாா். அதாவது, கச்சத்தீவு ஒப்பந்தப்படி 285 ஏக்கரைக் கொடுத்துவிட்டு, 6,500 கிலோமீட்டா் பரப்புள்ள இடத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது இந்திரா காந்திதான். வளமான, பல்லுயிா் வளமிக்க, எண்ணெய் தாது இடங்களை இந்தியாவுக்கு கொடையாகப் பெற்றுத் தந்தாா். எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தவறு ஏதும் இழைக்கப்படவில்லை என அவா் தெரிவித்தாா்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க