செய்திகள் :

தெரு நாய் சுட்டுக்கொலை! விடியோ வைரலானதால் ஒருவர் கைது!

post image

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பட்டப்பகலில் தெரு நாயை சுட்டுக்கொன்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஞ்சியின் தட்டிசில்வாய் பகுதியிலுள்ள சாலையில் பிரதீப் பாண்டே என்ற நபர் கையில் துப்பாக்கி ஏந்தியப்படி தனது நண்பர்களுடன் நடந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கிருந்த தெரு நாய்களில் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை அவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

அப்பாவி ஜீவனை பிரதீப் சுட்டுக்கொன்ற சம்பவம் முழுவதும் அங்கிருந்தவர்களால் விடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த விடியோ இணையத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகப் பயணாளர்கள் அந்த விடியோவைப் பகிர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்ததுடன் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்றபோது, அந்த சாலையில் வாகனங்கள் சென்று கொண்டு மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டதாகவும், பிரதீப்பின் இந்த செயலால் அங்கிருந்தவர்கள் மீது குண்டு பாய்ந்து அவர்களது உயிருக்கு ஆபத்தாகியிருக்கக் கூடும் என அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் விடியோ வைரலானதினால் தட்டிசில்வாய் காவல் துறை உயர் அதிகாரி குற்றவாளியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டத்தைத் தொடர்ந்து பிரதீப்பை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த சில நாள்களாக அந்த நாய் வெறிப்பிடித்து அங்குள்ளவர்களைக் கடித்ததாகவும் இதனால்தான் அந்த நாயைக் கொன்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருப்பினும், இந்திய சட்டத்தின்படி தெரு நாயை கொல்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதினால் குற்றவாளிக்கு அபராதத்துடன் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: இந்திய ஐ-போன்களை அமெரிக்காவுக்கு இடமாற்றும் ஆப்பிள்!

நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற விமானம் அவசரமாகத் தரையிறக்கம்!

நேபாளத்தில் 12 இந்தியர்கள் சென்ற தனியார் விமானம் அவசரமாக காத்மாண்டின் பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் உள்நாட்டில் பயணிக்க இயக்கப்படும் சீதா ஏர்லைன்ஸ் எனும் தனியார் நிறுவன... மேலும் பார்க்க

ஹரியாணாவில் அம்பேத்கர் சிலை உடைப்பு! 2 பேர் கைது!

ஹரியாணா மாநிலத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹிஸார் மாவட்டத்திலுள்ள நாங்தலா கிராமத்திலுள்ள ஓரு பூங்காவில் அம்பேத்கர் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்பேத்... மேலும் பார்க்க

பாங்காக் சென்றதை மறைக்க கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது!

மகாராஷ்டிரத்தின் மும்பை விமான நிலையத்தில் தனது கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புணே மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பாலேராவ் (வயது 51) என்ற நபர், கடந்த ஏப்.14 ஆம் தேதி மும்... மேலும் பார்க்க

இபிஎஸ் பெயருடன் வந்த மின்னஞ்சல் மூலம் கேரள அரசு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநில பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்.16) காலை வெடி... மேலும் பார்க்க

ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!

யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின்... மேலும் பார்க்க

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?

ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற... மேலும் பார்க்க