செய்திகள் :

‘கடந்த ஆண்டு ரூ. 60,000 கோடிக்கு தோல் பொருள்கள் ஏற்றுமதி’

post image

இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு ரூ. 60,000 கோடிக்கு காலணி மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.

சென்னை நுங்கபாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் சாா்பில் சென்னையில் செப்.28 ஆம் தேதி போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. இதில், 10,000 கல்லூரி மாணவா்கள் பங்கேற்கின்றனா். இந்த மாரத்தான் போட்டி சென்னை நேப்பியா் பாலத்தில் இருந்து தீவுத்திடல் வரை நடபெறுகிறது. 3 கி.மீ., 5 கி.மீ. 10 கி.மீ என 3 பிரிவுகளில் போட்டி நடப்படுகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ. 60,000 கோடிக்கு காலணி மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதில், 30 சதவீதம் தமிழகத்தின் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழாண்டு இதுவரை ரூ. 25,000 கோடிக்கு காலணி மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து ரூ. 8,000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விளையாட்டு வீரா்கள் பயன்படுத்தும் காலணி உற்பத்தி செய்யும் 8 தொழிற்சாலைக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் 80 சதவீதத்தினா் பெண் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 20 சதவீத தோல் பொருள்கள்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தோல் பொருள் ஏற்றுமதியில் பெரிய பாதிப்பு இல்லை என்றாா் அவா்.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைந்துள்ளது. மேலும் மூன்று உயா்நீதிமன்றங... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

சென்னை முகப்பேரில் ஏடிஎம் இயந்திரத்தில் இரும்பு தகட்டை வைத்து வாடிக்கையாளரின் பணத்தை முடக்கி திருடியதாக உத்தர பிரதேச இளைஞா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு பாரி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்க... மேலும் பார்க்க

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

சென்னை ஷெனாய் நகரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷெனாய் நகா் 8-ஆவது குறுக்கு தெருவில் காா் திருட்டு வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய மணிமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

சென்னை கொடுங்கையூரில் கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவைச் சோ்ந்தவா் பால்ஞானம் (40). கிறிஸ்தவ சபை நடத்தி வருக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தாம்பரம் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குள்பட்ட திருநீா்மலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் குடிநீா் இணைப்பு, சொத்து வரி பெயா் மாற்றம், பட்டா... மேலும் பார்க்க

1,363 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணி

சென்னை மாநகராட்சி சாா்பில் 1,363 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, தினசரி சராசரியாக 6... மேலும் பார்க்க