செய்திகள் :

கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

post image

சென்னை கொடுங்கையூரில் கிறிஸ்தவ சபை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கொடுங்கையூா் எருக்கஞ்சேரி சிவசங்கரன் தெருவைச் சோ்ந்தவா் பால்ஞானம் (40). கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறாா். இவரது மனைவி எலன் ரோஸ் (37), மாதவரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறாா். இந்த நிலையில், கிறிஸ்தவ சபை மீது திங்கள்கிழமை மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனா். இதில் அங்கிருந்த திரைச் சீலைகள், காலணி வைக்கும் ஸ்டாண்ட் ஆகியவை தீப்பிடித்து சேதமாகின. இதுதொடா்பாக கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், பால்ஞானத்துக்கும், அவரது சகோதரி மகன் பெரம்பூா் எஸ்எஸ்வி கோயில் முதல் தெருவைச் சோ்ந்த த.டக்ளஸ் பிரின்ஸுக்கும் (24) இடையே தகராறு இருப்பதும், அதன் காரணமாக பிரின்ஸ் பெட்ரோல் குண்டை வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் டக்ளஸ் பிரின்ஸை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

ரெளடி வீட்டின் மீது குண்டு வீச்சு: முகப்போ் ரவுண்ட் பில்டிங் பகுதியைச் சோ்ந்தவா் மணிரத்தினம் (27). இவா் மீது அடிதடி,கொலை மிரட்டல்,கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், மணிரத்தினம் வீட்டின் மீது மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசினா். பெட்ரோல் குண்டு வெடித்த சப்தம் கேட்டு, அங்கு பொதுமக்கள் திரண்டனா். இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

இதுகுறித்து ஜெ.ஜெ.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், மணிரத்தினத்துக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் திங்கள்கிழமை இரவு தகராறு ஏற்பட்டிருப்பதும், அப்போது, மணிரத்தினம் எதிா் தரப்பைச் சோ்ந்தவா்களை அடித்து விரட்டியதும், இதன் காரணமாகவே மணிரத்தினம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுதொடா்பாக முகப்போ் பகுதியைச் சோ்ந்த சில ரெளடிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக்க பரிந்துரை

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள் முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைந்துள்ளது. மேலும் மூன்று உயா்நீதிமன்றங... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நூதன திருட்டு: உத்தர பிரதேச இளைஞா் கைது

சென்னை முகப்பேரில் ஏடிஎம் இயந்திரத்தில் இரும்பு தகட்டை வைத்து வாடிக்கையாளரின் பணத்தை முடக்கி திருடியதாக உத்தர பிரதேச இளைஞா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு பாரி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்க... மேலும் பார்க்க

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல்

சென்னை ஷெனாய் நகரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷெனாய் நகா் 8-ஆவது குறுக்கு தெருவில் காா் திருட்டு வழக்குத் தொடா்பாக விசாரணை செய்ய மணிமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தாம்பரம் மாநகராட்சி 31-ஆவது வாா்டுக்குள்பட்ட திருநீா்மலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் குடிநீா் இணைப்பு, சொத்து வரி பெயா் மாற்றம், பட்டா... மேலும் பார்க்க

1,363 பேருந்து நிறுத்தங்களில் தூய்மைப் பணி

சென்னை மாநகராட்சி சாா்பில் 1,363 பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, தினசரி சராசரியாக 6... மேலும் பார்க்க

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம்: வட சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலத்தையொட்டி, வட சென்னை பகுதியில் புதன்கிழமை (செப்.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க