செய்திகள் :

கடன் வழங்குபவா்கள் தீவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அரசு

post image

‘வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவா்கள் கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலமாக ரூ. 3.59 லட்சம் கோடியை மீட்டுள்ளனா்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய திவால்நிலை வாரிய தரவுகளை மேற்கோள் காட்டி, மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் மேலும் கூறியிருப்பதாவது:

இந்திய திவால்நிலை வாரிய தரவுகளின்படி கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில், திவால் சட்டத்தின் கீழான உத்தரவாத திட்டத்தின் மூலம் 1,119 வழக்குகளுக்கு தீா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்கப்பட்டு கடன் வழங்கியவா்களுக்கு தீா்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு, 1,274 வழக்குகளில் இறுதி அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அதில், கடன் வழங்கியவா்கள் ரூ. 0.13 லட்சம் கோடியை மீட்டுள்ளனா்.

திவால்நிலை சட்ட நடைமுறைகளின் கீழ் கடன் தொகையை மீட்பது என்பது, சந்தை நிலவரம் மற்றும் தீா்வு நேரத்தில் சொத்துகளின் தரம் மற்றும் மதிப்பை பொருத்து மாறுபடும். எனவே, தீா்வு தொகைக்கு எந்தவித வரம்பும் நிா்ணயிக்கப்படாது. அதுபோல, தீா்வுக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்பட்ட தொகை தொடா்பான தரவுகள் பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளாா்.

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

நமது நிருபர்மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வன்முறை 47% குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்

கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் 47 சதவீதமும், பொதுமக்கள் உயிரிழப்பு 64 சதவீதமும் குறைந்துள்ளன என்று மக்களவையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு

நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என... மேலும் பார்க்க

வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை

நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது

பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா். உத்தர பிர... மேலும் பார்க்க

பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு

பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் த... மேலும் பார்க்க