செய்திகள் :

கடலூர் ரயில் விபத்து: மாவட்ட ஆட்சியர் மீது குற்றம்சாட்டும் தெற்கு ரயில்வே

post image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் விபத்து நிகழ்ந்த ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுக்கவில்லை என்று தெற்கு ரயில்வே சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

செம்மங்குப்பம் ரயில் விபத்துக்கு மன்னிப்புக் கோருவதாக தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ்ச் செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட் இருக்கும் இடத்தில் சுரங்கப்பாதை அமைத்து, கேட்டை மூடும் பணிக்காக, தெற்கு ரயில்வே நிதி ஒதுக்கி, ஓராண்டாகிவிட்டது. ஆனால், அங்கு சுரங்கப் பாதை அமைக்க கடலூர் ஆட்சியர் ஒரு வருடமாக அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட் பகுதியில், தனியார் பள்ளி வேன் மீது விழுப்புரத்திலருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மோதிய விபத்தில், திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் பலியாகினர்.

மேலும், பள்ளி வேனில் இருந்த ஓட்டுநர் சங்கர் (47) மற்றும் 2 மாணவர்கள் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னுக்குப் பின் முரண்!

விபத்து குறித்து தெற்கு ரயில்வே முதலில் வெளியிட்ட அறிக்கைக்கும், இரண்டாவது அறிக்கைக்கும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ரயில்வே வெளியிட்ட முதல் அறிக்கையில், செம்மங்குப்பம் ரயில் கேட்டை கேட் கீப்பர் மூடியதாகவும், தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டதால், கேட்டை மீண்டும் திறந்துவிட்டதாக தெரிவித்திருந்தது. பிறகு, அந்த அறிக்கையை திருத்தி இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கேட் கீப்பர், ரயில்வே கேட்டை மூட முயன்றதாகவும், அதனை திறக்க சொல்லி ஓட்டுநர் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேட் கீப்பர் பணியிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கும் பங்கஜ் சர்மாவை, பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வேன் மீது ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகம் - ஆலப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நேரிட்டுள்ளது.

Southern Railway has alleged that the Cuddalore District Collector has not granted permission to construct a tunnel at the railway gate where the accident occurred in Chemmanguppam, Cuddalore district, even after more than a year.

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க