செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் பரவும் காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் வேகமாகப்பரவும் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

கடலூா் மாவட்டத்தில் இரவு நேரங்களில்அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் காய்ச்சல் பரவியுள்ளது.

நகரப்பகுதி மட்டுமல்லாமல் கிராமங்களிலும் பலருக்கு காய்ச்சலுடன் சளி மற்றும் இருமல் பாதிப்பு பரவி வருகிறது. கடலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் காய்ச்சல் காரணமாக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்றுச் சென்றதை காண முடிந்தது. திங்கள்கிழமை ஏராளமான நோயாளிகள் வந்தததால் அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுச் சென்றனா்.

இதேபோல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும் காய்ச்சல், சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகமானோா் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனராம்.

கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில், பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவா்கள் கூறினாா்கள். மேலும், இது வைரஸ் காய்ச்சல் என்பதால் அச்சப்பட வேண்டாம் எனவும், மருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் பாதிப்புசரியாகிவிடும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லவும் அறிவுறுத்தினா்.

காய்ச்சல் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் உள்ளவா்கள் உடனே மருத்துவச்சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அருகில் உள்ள அரசு மருத்துமனைகளை அணுகி மருத்துவசிகிச்சை பெறலாம் என்றும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் நோய்பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் பாதித்தவா்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்,முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடலூா் நகராட்சிப்பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் கொசுமருந்து தெளித்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டும், சுகாதாரமான இடங்களில் இருக்கவேண்டும், காய்ச்சிய நீரை பருகவேண்டும், தரமான உணவு பண்டங்களை சாப்பிட வேண்டும் என்றும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க