செய்திகள் :

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

post image

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து ஏற்காட்டில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்ற தொடங்கியது. இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்தது.

இந்த பனிமூட்டத்தால் ஏற்காடு முழுவதும் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கடும் பனி சூழ்ந்து 5 அடி தூரத்தில் இருப்பதுகூட தெரியாத சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை சரியான அளவில் தெரியாததால் வாகனத்தின் முகப்பு விளக்கை எறியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

மேலும், கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. ஏற்காட்டைச் சூழ்ந்த கடும் பனி மூட்டத்தாலும் மழையாலும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவிலேயே வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் குளுகுளுவென மாறிய ஏற்காட்டில் உள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப்பார்த்து மகிழ்கின்றனர்.

ஏற்காடு படகு இல்லம் சென்ற சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்தவாறு ஏரியைச் சூழ்ந்த பனிமூட்டத்தைக் கண்டு ரசித்தனர். மேலும் சூழல் சுற்றுலாப் பூங்காவிற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சாகச விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். தொடர்ந்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வ... மேலும் பார்க்க

தமிழா்கள் மீது பாஜகவுக்கு வன்மம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழா்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:பாஜகவைச் ச... மேலும் பார்க்க

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்

சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று ம

சென்னை: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.இது குறித்... மேலும் பார்க்க

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக... மேலும் பார்க்க

விளையாட்டு பல்கலை. துணைவேந்தா் நியமனம்: யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநா் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனம் தொடா்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் யுஜிசி பிரதிநிதியுடன்... மேலும் பார்க்க