திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி த...
கன்னியாகுமரி நகராட்சிக்கு ஆணையா் நியமனம்
கன்னியாகுமரி நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து கொல்லங்கோடு நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஈழவேந்தன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றாா். அவா் பதவியேற்ற சில நாள்களில் ஐ.ஏ.எஸ். தோ்வு எழுதுவதற்காக நீண்ட விடுப்பில் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு குளச்சல் நகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த கன்னியப்பன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு பதவியேற்றாா்.
இந்நிலையில் அவரும் விடுவிக்கப்பட்டு, அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த செல்வராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு கன்னியாகுமரி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் விரைவில் கன்னியாகுமரியில் பதவி ஏற்பாா் என்று தெரிகிறது.