செய்திகள் :

``கம்யூனிச இயக்கங்கள் பெரியார், அம்பேத்கர் இயக்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்'' -சாலமன் பாப்பையா

post image

"இல்லாத மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, உழைத்து கொடுக்கும் ஏழைகளுக்கு பாடுபடும் இயக்கஙகள் மலர்ச்சி பெற வேண்டும்." என்று பட்டிமன்ற நடுவரும், மூத்த தமிழறிஞருமான சாலமன் பாப்பையா பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -வது அகில இந்திய மாநாடு எப்ரல் 2 முதல் 6 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசும்போது, "கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 75 ஆண்டுகளாக மதுரை மண்ணில் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வு, முன்னேற்றத்திற்கு நடத்திய பல போராட்டங்களை நேரில் கண்டவன் என்கிற வகையில், இந்த அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1945 முதல் பொதுவுடமை இயக்கம் எனக்கு பழக்கமானதுதான். அப்போது ஹார்வி மில்லில் என் அப்பா மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளராக இருந்தார். அங்கு வேலை பார்த்த 15 ஆயிரம் தொழிலாளர்களின் மரியாதைக்காகவும், உரிமைக்காகவும் பாடுபட்ட இயக்கம் கம்யூனிச இயக்கம். அவர்கள்தாம் ஏழைத் தொழிலாளர்களை எழுச்சி பெற வைத்தனர்.

திரையரங்குளில் படம் பார்க்க டிக்கெட் வாங்க அப்போது எல்லோரிடமும் காசு இருக்காது. அதனால் ஏழைகள் பொழுது போக்க வேறு வழியிருக்காது. அதனால் எங்கள் பகுதியில் தொடர்ந்து நடக்கும் பொதுவுடமைக் கட்சி கூட்டஙகளுக்கு செல்வோம்.

சிறையிலிருந்து விடுதலையாகி பி.ராமமூர்த்தியும், சங்கரய்யாவும் திலகர்திடலில் பேசுவதை 11 வயதில் கேட்டேன். அவர்கள் பேசுவது அந்த வயதில் புரியாது, ஆனாலும் இடைவிடாமல் கேட்போம்.

சாலமன் பாப்பையா

1962-ல் பாரதி குறித்து தோழர் ஜீவாவின் பேச்சை கேட்டிருக்கிறேன். ஜானகி அம்மாள் பேச்சை கேட்டிருக்கிறேன். அதன் பிறகு கலை இலக்கிய பெருமன்றத்தில் எனக்கு முதல் மேடை கிடைத்தது. அதன் மூலம் பல ஊர்களில் பேசச் சென்றேன். ஆவேசமாக உணர்ச்சியுடன் எழுச்சி ஏற்படுத்தும்படி கம்யூனிஸ்டுகளின் பேச்சு இருந்தது, கஞ்சிக்கு இல்லாததால் காலம் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

கீழடி பெருமையான விஷயம்தான் நமக்கு. செழிப்பான நகரில் வணிகப்பெருமக்கள் வியாபரம் செய்து வாழ்ந்த அதே இடத்தில்தான் ஏழை குடிமக்களும் வாழ்ந்திருப்பார்கள். இப்போதும் அதுபோல வாழும் மக்களின் வாழ்வு மேம்பட பொதுவுடமை இயக்கம் வளர வேண்டும்.

சோவியத் யூனியன், செஞ்சீனம் எழுச்சிபெற்று உருவான போது ஹங்கேரி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா, யுகோஸ்லோவியா போன்ற நாடுகள் இருந்த நிலையை திரும்பி பார்க்கிறேன்.

சாலமன் பாப்பையா

இல்லாத மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, உழைத்து கொடுக்கும் ஏழைகளுக்கு பாடுபடும் இயக்கங்கள் மலர்ச்சி பெற வேண்டும். இனி இந்த மண்ணில் கம்யூனிச இயக்கங்கள் ஒன்றுபடுவது மட்டுமல்ல, பெரியார் இயக்கமும், அம்பேத்கர் இயக்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் இந்த மண் செழிக்கும். தனித்துப்போராடி பலனில்லை. இந்தக்காலம் மிக கடுமையானதாக பல கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் என் கருத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

TASMAC வழக்கு: `தமிழ்நாட்டை விட்டு, மற்ற மாநில நீதிமன்றத்தை நாடுவது ஏன்?' - எடப்பாடி சொன்ன காரணம்

அந்த தியாகி யார்? என்ற பேட்ஜை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்குச் சென்றிருந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்து சென்றிரு... மேலும் பார்க்க

`இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா தடை' - சவூதி அரேபியா அறிவிப்பும் காரணமும்!

இன்னும் சில மாதங்களில் இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரை தொடங்கவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை சவவூதி அரேபியா அரசு செயல்படுத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதி... மேலும் பார்க்க

WAQF Bill: ``ஆ.ராசா தலைமையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்'' - முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் வக்ஃபு திருத்த மசோதா குறித்து பேசுகையில், "வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மூட்டுவலி; Uric Acid அதிகரித்தது தான் காரணமா?

Doctor Vikatan: என் வயது 43. கடந்த சில மாதங்களாக மூட்டுகளில், கால்களில் வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் எடுத்தும்குணம் தெரியவில்லை. பிளட் டெஸ்ட் செய்து யூரிக் ஆசிட் அளவை சரிபார்க்கும்படிசொல்கிற... மேலும் பார்க்க

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சராக இருப்பவர் கே.... மேலும் பார்க்க