செய்திகள் :

வெப்ப அலை: திறந்தவெளி தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்கள்!

post image

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்பம், அதீத மாசு காரணமாக அங்குள்ள மக்கள் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார தினம் இன்று கடைப்பிடிக்கும் அதேவேளையில், தலைநகரில் ஆயிரக்கணக்கான தினக்கூலி செய்யும் திறந்தவெளி தொழிலாளர்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். தில்லியில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெய்யில் கொளுத்தி வருகின்றது. ஒருபக்கம் வெய்யில், மறுபக்கம் மாசு இரண்டுக்கும் மத்தியில் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே பல நகரில் இன்றும், நாளையும் அதிக வெய்யிலுக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வுத் துறை விடுத்துள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 3.1 டிகிரி அதிகமாக 38.2 டிகிரி செல்சியஸாக பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 18.5 டிகிரி செல்சியஸாகவும், காற்றின் தரக் குறியீடு 209 டிகிரியில் மோசமான பிரிவில் தொடர்ந்தது.

அதிகப்படியான வெப்ப அலையால் சிக்கித் தவிக்கும் தில்லியைச் சேர்ந்த வெளிப்புற தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புகளையும், சுகாதார சவால்களையும் எதிர்கொள்கின்றனர். அதில் தொழிலாளி ஒருவர் கூறுகையில்,

அதிகப்படியான வெப்பத்தால் தோல் எரிகிறது, சிறுநீரக எரிச்சல் போன்ற அவதிகள் ஏற்படுகின்றன. தில்லியில் போதுமான தண்ணீர் கிடைத்தாலும், ஓய்வெடுக்க நிழலான பகுதிகள் பற்றாக்குறையாகவே உள்ளது. உடலில் உள்ள நீர் வெளியேறுவதால் விரைவில் சோர்வு ஏற்படுகிறது. நீண்ட நேரம் வெளியில் வேலை செய்யமுடியாத நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கெனவே காற்று மாசு தலைநகரைப் பாதித்துள்ளது. பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கோடையிலும் நன்கு உணர முடிகிறது. இதில் கடுமையான வெய்யிலால் உடல் ரீதியான பிரச்னைகள் மட்டுமல்லாது, நிதி நெருக்கடியையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெளியில் வந்து அன்றாடம் பொருள்கள் வாங்குவதும் குறைந்துவிட்டதாக அவர் கூறினார்.

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!

புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் லண்டன் செல்கிறார். இதற்காக அவர் திங்கள்கிழமை(ஏப... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.பிகார் ஷ... மேலும் பார்க்க

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை ரூ... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்: முதல்வர் தாமி!

மத்திய அரசின் கொள்கைகள் காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். டேராடூனில் இன்று மத்திய... மேலும் பார்க்க