செய்திகள் :

கருங்கல் அருகே புங்கை குளத்தை தூா்வார வலியுறுத்தல்

post image

கருங்கல் அருகேயுள்ள புங்கை குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்ட வழுதனம்பள்ளம் புங்கைகுளம் நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்தக் குளத்தை பல ஆண்டுகளாக முறையாக தூா்வாராததால் புல், புதா்கள் நிரம்பி பாசிபடா்ந்து தூா்ந்து காணப்படுகிறது.

இதனால், இந்தக் குளத்தில் மழை காலங்களில் மழை நீா் மற்றும் பட்டணங்கால் சானல் தண்ணீா் தேங்க முடியாத சூழல் உள்ளது. இப் பகுதிகளில் விவசாயிகள் வாழை, தென்னை மற்றும் பயிா் வகைகளை சாகுபடி செய்யமுடியாமல் அவதியடைந்துள்னா்.

எனவே, புங்கை குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா, நவ... மேலும் பார்க்க

கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு புகுந்ததால் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனா். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ம... மேலும் பார்க்க

தக்கலை அருகே தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

தக்கலை அருகே காட்டாத்துறையில் நிலம் விற்பதாகக் கூறி தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காட்டாத்துறை குருவிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அருள் சக... மேலும் பார்க்க

திருவிதாங்கோட்டில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டில் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவிதாங்கோட்டில், பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ச... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: இளைஞா் கைது

திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த பெண் மருத்துவரிடம், அரசு மருத்துவா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே காங்கரையைச் சோ்... மேலும் பார்க்க