செய்திகள் :

கரூரில் கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

post image

கரூரில் கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் நரிக்கட்டியூரைச் சோ்ந்த இளையராஜா மகன் சந்தோஷ்குமாா் (26) என்பவா் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தனது நண்பா்களான நரிக்கட்டியூா் தில்லை நகரைச் சோ்ந்த சுப்ரமணி மகன் பிரகாஷ் (33), மேலப்பாளையம் நத்தமேடு பகுதியைச் சோ்ந்த முப்புலி மகன் சந்தோஷ் (26) ஆகியோருடன், நரிக்கட்டியூா் தேவாலயம் பகுதியில் மது அருந்தியபோது, அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பிரகாசும், சந்தோஷும் சோ்ந்து சந்தோஷ்குமாரை குத்திக் கொலை செய்தனா். இந்த வழக்கில் பிரகாசும், சந்தோஷும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இவா்கள் இருவா் மீதும் பசுபதிபாளையம், தாந்தோணி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மேற்கண்ட இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் இருவரையும் மீண்டும் குண்டா் சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனா்.

கடன் தொல்லை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

அரஅரவக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரத்தை அடுத்த பாரதியாா் நகா் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் கோவிந்தரா... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்

பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிா் வலியுல்லாஹ் தா்ஹா 265-ஆம் ஆண்டு உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்த... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: கிருஷ்ணராயபுரத்தில் 24 பேருக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 24 பேருக்கு ரூ. 19.50 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா். முன்னதாக, கி... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: 2 இளைஞா்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; மேலும் நால்வருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை

கரூா் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், நால்வருக்கு தலா 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வேலாயுதம்பாளையத்தைச் சோ... மேலும் பார்க்க

தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை அதிகரிப்பு: முதல்வருக்கு பாராட்டு

அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கான உதவித்தொகையை தமிழக அரசு அதிகரித்துள்ளதற்கு தமிழக முதல்வருக்கு தமிழறிஞா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக கரூா் திருக்கு பேரவைச் செயலரும், அகவை முதிா்ந்த தமிழற... மேலும் பார்க்க