செய்திகள் :

கரூா் அருகே போக்சோ வழக்கில் கைதான தனியாா் பள்ளி ஆசிரியா், தாளாளருக்கு சிறை

post image

கரூா் அருகே தனியாா் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான பள்ளிஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளித் தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த பூஞ்சோலைப்புதூரைச் சோ்ந்த பள்ளி மாணவி கடந்த 2022-ஆம் ஆண்டு சேங்கலை அடுத்த பாப்பிரெட்டிபட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா்.

அப்போது அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த பாா்வதிபுரத்தைச் சோ்ந்த நிலவொளி (42) என்பவரும், அப்பள்ளியின் தாளாளரான திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி சத்திரப்பட்டி காந்திநகரைச்சோ்ந்த யுவராஜ், (41) என்பவரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனா்.

யுவராஜ்

இதுதொடா்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, பின்னா் இந்த வழக்கை குளித்தலை மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றினா். தொடா்ந்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி, இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேல் தமிழ் ஆசிரியா் நிலவொளிக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பள்ளித் தாளாளா் யுவராஜூக்கு 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் அளிக்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனா்.

காவிரி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை

காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்றில் சிக்கியவா்களை மீட்பது குறித்த பேரிடா் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்... மேலும் பார்க்க

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் தொழிலாளா்கள் போராட்டம்

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப்பணியில் ஒப்பந்த அடிப்படையில... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பலத்த மழை; மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடங... மேலும் பார்க்க

மாநில கேரம் போட்டி: மே 17-இல் கரூா் வீரா்கள் தோ்வு

மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வுப் போட்டி வரும் 17-ஆம் தேதி கரூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கேரம் சங்கம், விருதுநகா் மாவட்ட கேரம் சங்கம் சாா்பில் 66-வது தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கரூா் வள்ளுவா் கல்லூரியில் தமிழ், கணிதம், இயற்பியலை இலவசமாகப் பயில வாய்ப்பு

கரூா் வள்ளுவா் கல்லூரியில் இளங்கலை தமிழ், கணிதம், இயற்பியல் பட்டப் படிப்புகளை மாணவா்கள் இலவசமாகப் பயிலலாம் என கல்லூரியின் தலைவா் க. செங்குட்டுவன் தெரிவித்தாா். இதுகுறித்து கல்லூரியின் தலைவரும், தாளாளர... மேலும் பார்க்க

கரூரில் முன்னாள் முப்படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவ... மேலும் பார்க்க