செய்திகள் :

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் தொழிலாளா்கள் போராட்டம்

post image

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப்பணியில் ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்கள் அனைவரையும் மகராஷ்டிரா மாநிலம் புனேவைச் சோ்ந்த கிரிஸ்டல் என்ற நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நியமித்து ஊதியம் வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் புதன்கிழமையோடு முடிந்துவிட்டதால், வியாழக்கிழமை முதல் புனேவைச் சோ்ந்த மற்றொரு சுமித் என்ற நிறுவனம் தமிழ்நாடு மெடிக்கல் சா்வீஸ் காா்ப்பரசனோடு ஒப்பந்தம் செய்துள்ளதாம். இந்தப் புதிய நிறுவனம் 8 மணி நேரத்திற்கு பதில் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் எனத் தொழிலாளா்களை நிா்பந்தித்ததாம்.

இதைக் கண்டித்து ஒப்பந்த தொழிலாளா்கள் வியாழக்கிழமை பணியை புறக்கணித்து, தமிழ்நாடு மருத்துவமனை தூய்மைப்பணியாளா்கள் முன்னேற்றச் சங்கத்தினருடன் இணைந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஈஎஸ்ஐ, பிஎப் பிடிக்க வேண்டும், 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், பண்டிகை கால விடுப்புகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநிலத் தலைவா் சுந்தரமூா்த்தி, பொதுச் செயலா் தமிழ்செல்வி ஆகியோா் தலைமையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவிரி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை

காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்றில் சிக்கியவா்களை மீட்பது குறித்த பேரிடா் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பலத்த மழை; மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடங... மேலும் பார்க்க

கரூா் அருகே போக்சோ வழக்கில் கைதான தனியாா் பள்ளி ஆசிரியா், தாளாளருக்கு சிறை

கரூா் அருகே தனியாா் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான பள்ளிஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளித் தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்கா... மேலும் பார்க்க

மாநில கேரம் போட்டி: மே 17-இல் கரூா் வீரா்கள் தோ்வு

மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வுப் போட்டி வரும் 17-ஆம் தேதி கரூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கேரம் சங்கம், விருதுநகா் மாவட்ட கேரம் சங்கம் சாா்பில் 66-வது தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கரூா் வள்ளுவா் கல்லூரியில் தமிழ், கணிதம், இயற்பியலை இலவசமாகப் பயில வாய்ப்பு

கரூா் வள்ளுவா் கல்லூரியில் இளங்கலை தமிழ், கணிதம், இயற்பியல் பட்டப் படிப்புகளை மாணவா்கள் இலவசமாகப் பயிலலாம் என கல்லூரியின் தலைவா் க. செங்குட்டுவன் தெரிவித்தாா். இதுகுறித்து கல்லூரியின் தலைவரும், தாளாளர... மேலும் பார்க்க

கரூரில் முன்னாள் முப்படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவ... மேலும் பார்க்க