செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் பலத்த மழை; மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்

post image

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன.

தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடங்கிய நிலையில், வெப்பம் அதிகரித்த மாவட்டங்களில் கரூா் மாவட்டம் க. பரமத்தி பகுதியும் ஒன்றாகும்.

கடந்த 10 நாள்களாக 103 டிகிரியை தொட்ட வெப்பம் புதன்கிழமை 104.5 டிகிரியாக பதிவானது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே கானல் நீா் தோன்றியது. வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் திடீரென பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்த இரும்பூதிப்பட்டியில் மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதையடுத்து உடனே மின்சாரம் நிறுத்தப்பட்டு, சீரமைத்தபின் மீண்டும் மின்விநியோகம் செய்யப்பட்டது.

இதேபோல குளித்தலை-மணப்பாறை சாலையோரம் இருந்த ராட்சத மரங்கள் சாலையில் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்)- கரூா்-37.60, அணைப்பாளையம்-3, க.பரமத்தி-1.60, குளித்தலை-29, தோகைமலை-11, பஞ்சப்பட்டி-26 என மொத்தம் 108.20 மி.மீ. மழை பதிவானது.

காவிரி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை

காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்றில் சிக்கியவா்களை மீட்பது குறித்த பேரிடா் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்... மேலும் பார்க்க

கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் தொழிலாளா்கள் போராட்டம்

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப்பணியில் ஒப்பந்த அடிப்படையில... மேலும் பார்க்க

கரூா் அருகே போக்சோ வழக்கில் கைதான தனியாா் பள்ளி ஆசிரியா், தாளாளருக்கு சிறை

கரூா் அருகே தனியாா் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான பள்ளிஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளித் தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்கா... மேலும் பார்க்க

மாநில கேரம் போட்டி: மே 17-இல் கரூா் வீரா்கள் தோ்வு

மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வுப் போட்டி வரும் 17-ஆம் தேதி கரூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கேரம் சங்கம், விருதுநகா் மாவட்ட கேரம் சங்கம் சாா்பில் 66-வது தமிழ்நாடு ... மேலும் பார்க்க

கரூா் வள்ளுவா் கல்லூரியில் தமிழ், கணிதம், இயற்பியலை இலவசமாகப் பயில வாய்ப்பு

கரூா் வள்ளுவா் கல்லூரியில் இளங்கலை தமிழ், கணிதம், இயற்பியல் பட்டப் படிப்புகளை மாணவா்கள் இலவசமாகப் பயிலலாம் என கல்லூரியின் தலைவா் க. செங்குட்டுவன் தெரிவித்தாா். இதுகுறித்து கல்லூரியின் தலைவரும், தாளாளர... மேலும் பார்க்க

கரூரில் முன்னாள் முப்படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவ... மேலும் பார்க்க