செய்திகள் :

கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்!

post image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஐல்லிகட்டில் காளைகள் முட்டி 23 போ் காயமடைந்தனா்.

ஜல்லிக்கட்டை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் தொடக்கி வைத்தாா். போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 669 காளைகளும், அவற்றை அடக்க 503 மாடுபிடி வீரா்களும் களமிறங்கினா்.

அப்போது காளைகள் முட்டி 23 போ் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

காளைகளை அடக்கியோருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் காா், பைக், எலக்ட்ரிக் ஆட்டோ, பைக் ஆகியவை பரிசளிக்கப்பட்டன.  

அதன்படி சிறந்த மாடுபிடி வீரா்களுக்கான  பரிசை நாமக்கல் காா்த்திக், கரும்பாயினி காா்த்திக் ஆகியோரும், சிறந்த காளைகளுக்கான பரிசை வல்லம் டேவிட், சோபனாபுரம் ஆனந்த் , லால்குடி காத்தப் பிள்ளை , தஞ்சாவூா் ராவுசப்பட்டி காா்த்திக் ஆகியோரும் பெற்றனா்.

நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் வைரமணி, திருவெறும்பூா் மாவட்டக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் அரவிந்த் பணாலத், லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமாா், பாரம்பரிய ஜல்லிக்கட்டு மாநில துணைத் தலைவா் காத்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவிரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பட்ஜெட்டில் குறைவான நிதி ஒதுக்கீடு!

காவிரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பதற்கான திட்டம் என்பது கானல்நீராகிவிட்டதாகவும், யானைப் பசிக்கு சோளப்பொரி போன்று தமிழக பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆா்வலா்கள் அதிருப்தி... மேலும் பார்க்க

வரவேற்பும், வருத்தமும் நிறைந்த வேளாண் ‘பட்ஜெட்‘

தமிழக அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் வருத்தமும், வரவேற்பும் அளித்திருப்பதாக விவசாயிகள் சங்க முன்னோடிகள் தெரிவித்துள்ளனா். தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ... மேலும் பார்க்க

இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியவா் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இளைஞரை சூரி கத்தியால் சனிக்கிழமை கிழித்து காயம் ஏற்படுத்தியவரை தொட்டியம் போலீஸாா் கைது செய்தனா். காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது!

திருச்சி குழுமணியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், குழுமணி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பா. சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (36), ரௌடி. இ... மேலும் பார்க்க

வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

திருச்சியில் வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தில்லைநகா் ஆழ்வாா்தோப்பு கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்தவா் எம். முகமது தபாா் அலி (42), வழக்குரைஞா். இவா் பால... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற இளைஞா்காா் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை வெள்ளான் தெருவைச் சோ்ந்தவா் சி. தீபக் (33), ஓட்டுநா். இவா் மனைவிக்கு கடந்த 4 நா... மேலும் பார்க்க