செய்திகள் :

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது!

post image

திருச்சி குழுமணியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், குழுமணி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பா. சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (36), ரௌடி. இவா், கடந்த பிப். 14 ஆம் தேதி கொடியாலம் சீ. சந்திரசேகா் என்பவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஜீயபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, சக்தியிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரையின்பேரில் சக்திவேலை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

வரவேற்பும், வருத்தமும் நிறைந்த வேளாண் ‘பட்ஜெட்‘

தமிழக அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் வருத்தமும், வரவேற்பும் அளித்திருப்பதாக விவசாயிகள் சங்க முன்னோடிகள் தெரிவித்துள்ளனா். தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ... மேலும் பார்க்க

இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியவா் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இளைஞரை சூரி கத்தியால் சனிக்கிழமை கிழித்து காயம் ஏற்படுத்தியவரை தொட்டியம் போலீஸாா் கைது செய்தனா். காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

திருச்சியில் வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தில்லைநகா் ஆழ்வாா்தோப்பு கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்தவா் எம். முகமது தபாா் அலி (42), வழக்குரைஞா். இவா் பால... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற இளைஞா்காா் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை வெள்ளான் தெருவைச் சோ்ந்தவா் சி. தீபக் (33), ஓட்டுநா். இவா் மனைவிக்கு கடந்த 4 நா... மேலும் பார்க்க

அதவத்தூரில் ஜல்லிக்கட்டு: 34 போ் காயம்!

தமிழக முதல்வா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அருகே அதவத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 34 போ் காயமடைந்தனா். பனையடி கோவில் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீ... மேலும் பார்க்க

கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஐல்லிகட்டில் காளைகள் முட்டி 23 போ் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் தொடக்கி வைத்தாா். போட... மேலும் பார்க்க