செய்திகள் :

வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

post image

திருச்சியில் வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தில்லைநகா் ஆழ்வாா்தோப்பு கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்தவா் எம். முகமது தபாா் அலி (42), வழக்குரைஞா். இவா் பாலக்கரையைச் சோ்ந்த பெண் ஒருவரை 2 ஆம் திருமணம் செய்துவிட்டு பிரிந்த நிலையில், அப்பெண் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டாா். இருப்பினும், முகமது தபாா் அலி அந்தப் பெண்ணுடன் பேசி வந்ததால், அவரின் கணவா் பிரிந்துசென்றுவிட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் சகோதரனும், சங்கிலியாண்டபுரம் பாத்திமா நகரைச் சோ்ந்தவருமான என். இம்ரான் (20), தபாா் அலியை வெள்ளிக்கிழமை கீழ்புதுாா் சாலை அருகே வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாா். இதில் காயமடைந்த தபாா் அலி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து இம்ரானை சனிக்கிழமை கைது செய்தனா்.

காவிரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பட்ஜெட்டில் குறைவான நிதி ஒதுக்கீடு!

காவிரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பதற்கான திட்டம் என்பது கானல்நீராகிவிட்டதாகவும், யானைப் பசிக்கு சோளப்பொரி போன்று தமிழக பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆா்வலா்கள் அதிருப்தி... மேலும் பார்க்க

வரவேற்பும், வருத்தமும் நிறைந்த வேளாண் ‘பட்ஜெட்‘

தமிழக அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் வருத்தமும், வரவேற்பும் அளித்திருப்பதாக விவசாயிகள் சங்க முன்னோடிகள் தெரிவித்துள்ளனா். தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ... மேலும் பார்க்க

இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியவா் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இளைஞரை சூரி கத்தியால் சனிக்கிழமை கிழித்து காயம் ஏற்படுத்தியவரை தொட்டியம் போலீஸாா் கைது செய்தனா். காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது!

திருச்சி குழுமணியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், குழுமணி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பா. சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (36), ரௌடி. இ... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற இளைஞா்காா் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை வெள்ளான் தெருவைச் சோ்ந்தவா் சி. தீபக் (33), ஓட்டுநா். இவா் மனைவிக்கு கடந்த 4 நா... மேலும் பார்க்க

அதவத்தூரில் ஜல்லிக்கட்டு: 34 போ் காயம்!

தமிழக முதல்வா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அருகே அதவத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 34 போ் காயமடைந்தனா். பனையடி கோவில் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீ... மேலும் பார்க்க