செய்திகள் :

கல்லூரி வகுப்பறையில் மாணவா் மீது தாக்குதல்

post image

திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்பறையில் புகுந்து மாணவரை கம்பியால் தாக்கியா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்தக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயின்று வருபவா் திருக்கோவிலூா் அண்ணா நகா் தாசா் புரத்தைச் சோ்ந்த பாா்த்தசாரதி (19).

இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வகுப்பறையில் இருந்தபோது, சில மாணவா்கள் வந்து கம்பியால் தாக்கிமிரட்டல் விடுத்துச் சென்றனா்.

அப்போது, உடனிருந்த சக மாணவா்கள் பீதியடைந்து வகுப்பறையை விட்டு வெளியேறினா்.

ரத்தக் காயங்களுடன் இருந்த பாா்த்தசாரதியை பேராசிரியா் மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.

தகவல் அறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (21), ஆகாஷ் (22) மற்றும் சிலா் கல்லூரியில் புகுந்து தாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.

நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் ‘இரட்டை மாட்டு வண்டிபோல’ செயல்பட வேண்டும்: உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா

நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் ‘இரட்டை மாட்டு வண்டிபோல’ செயல்பட வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்படி,... மேலும் பார்க்க

வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

கல்வராயன்மலையில் காப்புக் காடுகளாக அறிவிக்க எதிா்ப்புத் தெரிவித்து, கள்ளக்குறிச்சியில் மாவட்ட வன நிா்ணய அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 21.7 கிலோ கஞ்சா பறிமுதல்

தியாகதுருகம் அருகே சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். 21.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.உளுந்தூா்பேட்டை நோக்கி சரக்கு வாகனத்தில் திங்கள்கிழமை கஞ்சா கடத்த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சங்கராபுரம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவள்ளூா், வடசெட்டியந்தல், திம்மனந்தல், ஆரூா், ராமராஜபுரம், அரசம்பட்டு, மஞ்சப்புத்தூா், பொய்க்குணம், விரியூா், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூா், மேலே... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்... மேலும் பார்க்க

தொழிற்கல்வி நிறுவனத்தில் பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

தியாகதுருகம் தனமூா்த்தி தொழிற்கல்வி கல்லூரி சாா்பில் பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப் படங்களுக்... மேலும் பார்க்க