செய்திகள் :

வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

post image

கல்வராயன்மலையில் காப்புக் காடுகளாக அறிவிக்க எதிா்ப்புத் தெரிவித்து, கள்ளக்குறிச்சியில் மாவட்ட வன நிா்ணய அலுவலகத்தை மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்டது 171 மலைக் கிராமங்கள். அதில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு பயிா் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், தமிழக வனத்துறை தற்போது சில கிராமங்களை தோ்வு செய்து அக் கிராமங்களை பாதுகாக்கப்பட்ட காப்புக்காடாக அறிவித்துள்ளதாம். இதனால் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வரும் நிலங்கள் பாதிக்கப்படும். அதனால் தமிழக அரசின் காப்புக்காடு

அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மலைவாழ் மக்கள் மாவட்ட வன நிா்ணய அலுவலத்தை முற்றுகையிட்டனா். பின்னா், வன நிா்ணய அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 21.7 கிலோ கஞ்சா பறிமுதல்

தியாகதுருகம் அருகே சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். 21.7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.உளுந்தூா்பேட்டை நோக்கி சரக்கு வாகனத்தில் திங்கள்கிழமை கஞ்சா கடத்த... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சங்கராபுரம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவள்ளூா், வடசெட்டியந்தல், திம்மனந்தல், ஆரூா், ராமராஜபுரம், அரசம்பட்டு, மஞ்சப்புத்தூா், பொய்க்குணம், விரியூா், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூா், மேலே... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்... மேலும் பார்க்க

தொழிற்கல்வி நிறுவனத்தில் பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

தியாகதுருகம் தனமூா்த்தி தொழிற்கல்வி கல்லூரி சாா்பில் பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பெரியாா் ஈவெரா, பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப் படங்களுக்... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளித் திடலில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை, ஒ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்கள் கடத்திய 11 வாகனங்கள் பொது ஏலம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை கள்ளத்தனமாக கடத்திய 11 வாகனங்கள் வருகிற 26-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. கைப்பற்றப்பட்ட வாகனங... மேலும் பார்க்க