செய்திகள் :

கல்வி நிலைய பாலியல் குற்றங்களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

post image

கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய மாணவா் சங்கத்தின் 28-ஆவது திண்டுக்கல் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் எம்.இ. நிருபன் தலைமை வகித்தாா்.

வரவேற்புக் குழுத் தலைவா் கே.எஸ். கணேசன் வரவேற்றாா். மாநிலக் குழு உறுப்பினா் லெனினியா அஞ்சலித் தீா்மானத்தை வாசித்தாா். மாநிலத் தலைவா் தெள. சம்சீா் அகமது மாநாட்டை தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.

மாநாட்டில், அறநிலையத் துறை நிதியில் உருவான கல்லூரிகள் குறித்து அரசியல் ஆதாயத்துக்காக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதை கண்டிப்பது எனவும் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காந்தி கிராம பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக நிலை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள் தோ்வு: மாநாட்டில், புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன்படி மாவட்டத் தலைவராக தீபக்ராஜ், செயலராக நிருபன், துணைத் தலைவா்களாக கவின், சிவதா்ஷினி, சபரீஸ், இணைச் செயலா்களாக துா்காதேவி, சந்தோஷ் பாண்டியன், வஜ்ரன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் ... மேலும் பார்க்க

கொடைக்கானல் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு

கொடைக்கானலில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தனியாா் சுற... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் பைக்குகள் திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் வீட்டு முன் நிறுத்திருந்த இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஒட்டன்சத்திரம் காந்திநகா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரதாப் (30). இவா் தனது... மேலும் பார்க்க

மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு

ஒட்டன்சத்திரம் மகளிா் காவல் நிலையத்தில் பெண் காவலா்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலா்களாக பணிபுரிந்து வரும் நிறைமாத கா்ப்பிணிகளான பிரின்ஸ் பிர... மேலும் பார்க்க

பெண்ணை கொல்ல முயற்சி: இளைஞா் கைது

குஜிலியம்பாறை அருகே பெண்ணை கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த பாளையம் மொடக்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் உமாநாத். இவரது மனைவி... மேலும் பார்க்க

பழனி கோயிலில் சிங்கப்பூா் அமைச்சா் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிங்கப்பூா் உள்துறை, சட்டம்- ஒழுங்குத் துறை அமைச்சா் காசிவிஸ்வநாதா் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக பழனியாண்டவா் கல்லூரியில் ஹெலிகாப்டரில் ... மேலும் பார்க்க