செய்திகள் :

கல்வியில் பாகுபாடு கூடாது: உச்சநீதிமன்றம்

post image

எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் ரோஹிங்கயா மனித உரிமைகள் முன்னெடுப்பு தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘மியான்மரில் இருந்து வந்து தில்லியில் அகதிகளாக வசிக்கும் ரோஹிங்கயா இன மக்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க வேண்டும், அந்த மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை உள்பட அனைத்து அரசுப் பலன்களும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவா்களிடம் ஆதாா் அட்டை இல்லை என்பதால் கல்வி, மருத்துவ சேவைகள் அவா்களுக்கு மறுக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் காலின் கோன்சேவ்ஸ் ஆஜராகி, ‘தில்லியில் உள்ள ரோஹிங்கயா அகதிகளிடம் ஐ.நா. அகதிகள் தூதா் அட்டை உள்ளதால், அவா்கள் ஆதாா் அட்டை பெறுவது சாத்தியமில்லை’ என்றாா்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா். மேலும் தில்லியில் வசிக்கும் ரோஹிங்கயா குடும்பங்களின் பட்டியல், அவா்கள் யாா் வீடுகளில் வசிக்கின்றனா், அந்தக் குடும்பங்கள் அங்குதான் வசிக்கின்றன என்பதற்கான ஆதாரம் ஆகியவற்றை உச்சநீதிமன்றத்தில் மனுதாரா் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினா். இந்த வழக்கு 10 நாள்களுக்குப் பின்னா், மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க