செய்திகள் :

கல்வியை மாநில பட்டியலின்கீழ் கொண்டு வருவது அவசியம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: தேசிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) சட்டப்பேரவையில் பேசினார்.

5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் காலை கூடியதும், மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டு வாசித்தார். அப்போது, மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், நீட் தேர்வால் மாணவர்கள் பலர் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர், நாங்கள்(திமுக) இத்தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்கப் பார்ப்பதாகவும் விமர்சித்தார்.

தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு ரூ.2,500 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுப்பதாக பேசிய முதல்வர், இதனையடுத்து, கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.

இதையும் படிக்க:மாநில உரிமைகள் மீட்டெடுக்க உயர்நிலைக் குழு: முதல்வர் அறிவிப்பு!

மாநில உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்படும் உயர்நிலைக் குழுவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் குரியன் தலைமை வகிப்பார்.

பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி (இந்திய கடல்சார் பல்கலைக்கழகக் முன்னாள் துணை வேந்தர்) மற்றும் பேராசிரியர் எம். நாகநாதன் (தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர்) ஆகியோர் இக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க