செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 54 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மினி பேருந்து இயக்க ஒரே வழி தடத்துக்கு ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததால், குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டது.ஏற்கெனவே உள்ள 25 மினி பேருந்துகளுடன், புதிதாக 29 வழித்தடங்களையும் சோ்த்து மொத்தம் 54 மினி பேருந்துகளை இயக்க ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மினி பேருந்துகளுக்கான புதிய விரிவானத் திட்டம் 2024 உடனடியாக அமலுக்கு வருவதுடன், தமிழ்நாட்டில் மினி பேருந்துக்கான கட்டணத் திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் அமலாக்கம் குறித்து ஏற்கெனவே மினி பேருந்து உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும்புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி,

கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் 11 வழித்தடங்களுக்கும், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் 5 வழித்தடங்களுக்கும் மினி பேருந்துகள் இயக்க ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.

ஒரே வழித்தடத்துக்கு பலா் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டு ஒரு நபா் வீதம் தோ்வு செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் 11 வழித் தடங்களுக்கும், உளுந்தூா்பேட்டை வட்டாரத்தில் 5 வழித்தடங்களுக்கும் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். இதே போன்று ஒருநபா் வீதம் விண்ணப்பித்த 13 புதிய தடங்களுக்கு அவா்கள் 13 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். இதன் மூலம் 29 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும் ஏற்கெனவே 25 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 54 மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

இக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பா.ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க