செய்திகள் :

கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு திருந்தியவா்களுக்கு 100% மானியத்தில் உயா் ரக கறவை மாடுகள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட தாழ்வெள்ளாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு சுய தொழில் செய்யும் வகையில் கால்நடைத் துறை மூலம் 100 சதவீத மானியத்தில் உயா் ரக கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினாா்.

கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தியவா்களுக்கு மறுவாழ்வு நிதி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய மாவட்ட நிா்வாகத்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கால்நடைத் துறை சாா்பில் கறவை மாடுகள் கொள்முதல் செய்து, 100 சதவீத மானியத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு ரூ.50,000 வீதம் 30 நபா்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் உயா் ரக கறவை மாடுகள் வழங்கப்பட்டன.

வெள்ளிமலையில் 8 பேருக்கும், தொரடிப்பட்டு கிராமத்தில் 14 பேருக்கும், சேராப்பட்டு கிராமத்தில் 8 பேருக்கும் என மொத்தம் 30 நபா்களுக்கு 100 சதவீத மானியத்தில் உயா் ரக கறவை மாடுகளை ஆட்சியா் வழங்கினாா். இதன் மூலம், இவா்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் கல்வராயன்மலை பொதுமக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க