செய்திகள் :

கள்ளச்சாராய வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட மூவா் நீதிமன்றத்தில் ஆஜா்

post image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 5 நாள்கள் போலீஸ் காவலில் இருந்த மூவா் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு ஜூன்19, 20 ஆகிய தேதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 68 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 24 பேரில், முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரா் தாமோதரன், பரமசிவம் ஆகிய 4 பேரை போலீஸாா் ஏற்கெனவே 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்திருந்தனா்.

இந்த நிலையில், சிறையில் இருக்கும் கதிரவன், ஜோசப்ராஜா, சின்னதுரை ஆகியோரையும் போலீஸாா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா். இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். அவா்கள், மூவரையும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க