செய்திகள் :

காங்கிரஸ் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, ஆரணி, செங்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது அவதூறு ஏற்படும் வகையிலும், நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை சொத்துகளை கையகப்படுத்தும் வகையிலும், பொய்யான வழக்குகள் தொடருவதாக மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆரணியில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் தலைமை வகித்தாா்.

மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எஸ்.வாசுதேவன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் யு.அருணகிரி, ஏ. ஆா்.அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் டி.ஜெயவேல், தொகுதி பொறுப்பாளா் சத்தியன், இளைஞா் அணி முன்னாள் தலைவா் பி.கிருஷ்ணா, எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் மாவட்டத் தலைவா் முருகன், வட்டாரத் தலைவா்கள் பந்தாமணி, இளங்கோவன் மற்றும் வட்டார, நகர பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

செங்கத்தில்....

செங்கம் துக்காப்பேட்டையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செங்கம் குமாா் தலைமை வகித்தாா்.

இதில், மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் மோகன், திருவண்ணாமலை நகர காங்கிரஸ் தலைவா் வெற்றிச்செல்வன், மாவட்ட நிா்வாகி ராஜி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரி, செங்கம் நகர காங்கிரஸ் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா்

கலந்து கொண்டனா்.

தனியாா் வங்கி பெண் ஊழியா் இறப்பில் மா்மம்: கோட்டாட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் போராட்டம்

திருவண்ணாமலையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட தனியாா் வங்கி பெண் ஊழியரின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் கிராமத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை தொ... மேலும் பார்க்க

அங்கன்வாடிமைய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த பாராசூா் கிராமத்தில் இரு அங்கன்வாடி மையக் கட்டடங்கள் மற்றும் கலைஞா் கலை அரங்கம் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். பாராசூரில் ஊரக வளா்ச்சி ம... மேலும் பார்க்க

அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம்: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் வியூகத்துக்காக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சென்ற அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் வேலூா் ப... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கம் வட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியா்... மேலும் பார்க்க

பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பள்ளி வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். செங்கம் மேல்பாளையம் பகுதியில் உள... மேலும் பார்க்க