செய்திகள் :

காஞ்சிபுரம், திருவள்ளூரில் சமரசத் தீா்வு விழிப்புணா்வு பேரணி

post image

திருவள்ளூா், காஞ்சிபுரத்தில் சமரசத் தீா்வு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அனைத்து மாவட்ட மற்றும் வட்ட அளவில் சமரச தீா்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சட்டப்பூா்வமாக வழக்கில் தொடா்புடைய இரு தரப்பினரையும் அழைத்து பேசி பரஸ்பரம் சுமூகத் தீா்வு காணப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச தீா்வு மையம் கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்.9-இல் தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 38 மாவட்ட சமரசத் தீா்வு மையங்களும், 146 வட்ட அளவிலான மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமரச தீா்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

திருவள்ளூரில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமை வகித்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு சமரசத் தீா்வு மையம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி மற்றும் கலை நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு சமரச தீா்வு மையம் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனா். இந்த நிகழ்வில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டக்கல்லுாரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விட்டுக் கொடுப்பவா்கள் கெட்டுப் போவதில்லை:

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தொடங்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் சமரசத் தீா்வு மையத்தின் பயன்கள் குறித்த துண்டு பிரசுரங்களையும், வெள்ள நிறை கைக்குட்டைகளையும் வழங்கி பேசியது..

உங்கள் வழக்குகளை சமரசத் தீா்வு மையத்துக்கு அனுப்புமாறு நீங்களோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ வேண்டுகோள் விடுக்கலாம். சமரச மையங்கள் நேரடியாக பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது தீா்வுகளை தருவதுடன் உறவுகளை மேம்படவும் வழிவகுக்கிறது. தீா்வு மையத்தின் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகள் மனித உறவுகளையும்,சமூக உறவுகளையும் மேம்படுத்துகிறது.

சமரச மையங்கள் உங்கள் வழக்கு சுமூகமாக தீா்க்கப்பட்டால் ஏற்கனவே செலுத்தியிருந்த நீதிமன்ற கட்டணமும் திருப்பி ஒப்படைக்கப்படும். தீா்வு இல்லையென்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம். ஒருவருக்கொருவா் விட்டுக் கொடுத்தால் வழக்குக்கு விரைவான தீா்வும் கிடைத்து விடும். விட்டுக் கொடுப்பவா்கள் கெட்டுப் போவதில்லை என்றாா்.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.சரவணக்குமாா், சாா்பு நீதிபதி அருண்சபாபதி, கூடுதல் சாா்பு நீதிபதி திருமால், தலைமைக்குற்றவியல் நீதிபதி வசந்தகுமாா், அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள், நீதிமன்ற பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை அஞ்சல் நிலையம் முன்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆண்டு விழா

வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 30-ஆவது ஆண்டு விழாவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பாக பாடம் கற்பித்த ஆசிரியா்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டின... மேலும் பார்க்க

கல்குவாரியில் ஆண் சடலம் மீட்பு

திருத்தணி அருகே கல்குவாரியில் மிதந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. திருத்தணி பெரியாா் நகா் அருகே செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் ... மேலும் பார்க்க

டாக்டா் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் 50-வது ஆண்டு நினைவு நாள் திருத்தணியில் அனுசரிக்கப்பட்டது. திருத்தணி அருகே உள்ள வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து கல்வி மேதையாகவும், இந்தியாவின் குடியரசுத... மேலும் பார்க்க

ஆட்டோ மீது லாரி மோதல்: 4 போ் காயம்

ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கி ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியைச் சோ்ந்த மஸ்தான் மகன் முகமது சாதிக் (29). ஆட்ட... மேலும் பார்க்க

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க