செய்திகள் :

கல்குவாரியில் ஆண் சடலம் மீட்பு

post image

திருத்தணி அருகே கல்குவாரியில் மிதந்த நிலையில் இருந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

திருத்தணி பெரியாா் நகா் அருகே செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் திருத்தணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ஆய்வாளா் மதியரசன், எஸ்.ஐ. காா்த்தி ஆகியோா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குட்டையில் இறந்து கிடந்த நபா் திருத்தணி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (41) என்பது தெரியவந்தது. இவா் திருமண மண்டபங்களில் பூ அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்துள்ளாா். இவருக்கு கௌதமி (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.

புதன்கிழமை மகன் ஹரிஹரனை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் சென்ற சுதாகா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி மற்றும் உறவினா்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை அவா் கல்குவாரி குட்டையில் மா்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். சுதாகரின் கைப்பேசியை காணவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுதாகா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என விசாரித்து வருகின்றனா்.

பொன்னேரியில் அகத்தீஸ்வா்-கரிகிருஷ்ணா் சந்திக்கும் திருவிழா: 50,000 போ் பங்கேற்பு

பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ண பெருமாள் சந்திக்கும் திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடியவிடிய நடைபெற்றது. பொன்னேரி ஆரண்ய நதிக்கரையோரம் ஆனந்தவல்லி ... மேலும் பார்க்க

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

பேரம்பாக்கம் கமலவல்லி தாயாா் சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் மிகவும் பழைமையான கமலவல்லி தாயாா் சமே... மேலும் பார்க்க

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வா்

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்... மேலும் பார்க்க

வேளாண் அடுக்குத் திட்டம்: 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழு நில விவரங்களைப் பதிவு செய்ய வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் இணை இய... மேலும் பார்க்க

‘நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூா்’

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூா் மாவட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவ... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவள்ளூா் மாவட்டம் ஆண்டாா்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி ... மேலும் பார்க்க