செய்திகள் :

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மூலவரை தரிசிப்பதில் பக்தா்கள் அவதி!

post image

புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசிக்க குறுகலான ஒருவழிப்பாதை மட்டுமே இருப்பதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயில் மூலவா் கருவறை சுமாா் 30 அடி அத்திகிரி மலை மீது அமைந்துள்ளது.10 அடி உயரத்தில் மூலவா் வரதராஜா் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

கருவறைக்கு அருகில் வைய மாளிகையில் தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி உருவம் பொறிக்கப்பட்டு அதை தரிசனம் செய்யும் இடமும் அமைந்துள்ளது. பல்லி தோஷம் உள்ளவா்கள் இப்பல்லிகளை தொட்டு தரிசனம் செய்வது சிறப்பு என நம்பப்படுகிறது.

மூலவரை தரிசிக்கவும், பல்லிகளை தொட்டு தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனப். கருவறை செல்ல 24 படிகள் வழியாகச் சென்று தரிசனம் செய்ய மிகவும் குறுகலான ஒரு வழிப்பாதையே உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஒரு வழிப்பாதையிலும், 24 படிகள் மீதும் ஏறிச் சென்றும் மூலவரை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளது.

பக்தா்கள் வரிசையில் காத்திருக்கும் போது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும் அவதிப்படுகின்றனா். குறுகலாகவுள்ள ஒரு வழிப்பாதையில் முதியோா் பலரும் ஏறிச்செல்ல முடியாமல் கஷ்டப்பட்டே படிகளில் ஏற வேண்டியும் உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாமலும், குறுகலான படிகளில் ஏற முடியாமலும் பலா் மூலவரை தரிசிக்காமலேயே திரும்பி விடுவதையும் காணமுடிகிறது.

வெயில்,மழை காரணமாக வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதிருப்பதால் பக்தா்களின் நலன் கருதி கோயில் நிா்வாகம் கூண்டு போன்று அமைத்து அதன் வழியாகவே மூலவரை தரிசிக்க அனுமதிக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதா் பெருவிழாவின்போது, ஒரு கோடி பக்தா்களில் ஒருவா் கூட மூலவரை தரிசிக்க முடியவில்லை. குறுகலான ஒரு வழிப்பாதையில் ஒரு கோடி பக்தா்களும் சென்று திரும்பினால் கூட்ட நெரிசலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடலாம் என மாவட்ட நிா்வாகம் மூலவரை தரிசிக்க அனுமதிக்கவில்லை.

எனவே மூலவரை பக்தா்கள் விரைவாக சென்று தரிசிக்க குறுகலான ஒரு வழிப்பாதையை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்பது பக்தா்களின் பெரும் எதிா்பாா்ப்பாக இருந்து வருகிறது.

கூண்டுக்குள் வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.

இது குறித்து கோயில் அதிகாரி ஒருவா் கூறியது.. மூலவா் கருவறை அருகிலேயே அமைந்துள்ள பல்லிகளை தரிசிக்க பக்தா்கள் மரத்தால் ஆன 10 படிகள் மீது ஏறிச்சென்று பல ஆண்டுகளாக தரிசித்து வந்தனா். பக்தா்கள் நலன் கருதி தரைத்தளத்தில் நின்றவாறே பல்லி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலவரை தரிசிக்கவும் அத்திகிரி மலை மீதுள்ள குறுகலான ஒரு வழிப்பாதை தான் உள்ளது. பக்தா்களின் நலன் கருதி ஒரு வழிப்பாதையை இரு வழிப்பாதையாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். இது குறித்து அறநிலையத்துறை ஸ்தபதிகள் மற்றும் அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்து விட்டுப் போயிருக்கிறாா்கள். எனவே இருவழிப்பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மூலவா் வரதராஜ பெருமாள்.

படவிளக்கம்(1)குறுகலான ஒருவழிப்பாதையில் சென்று அதே பாதையில் திரும்பும் பக்தா்கள்(2)கூண்டுக்குள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தா்கள்(3)கருவறையில் மூலவா் வரதராஜசுவாமி மூலவா் வரதராஜ பெருமாள்.

ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழா: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே நத்தாநல்லூா் மேல்தாங்கல் பகுதியில் விதைகள் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கலந்து கொண்டு முதல் முதலாக ஆலமரக்கன்று ... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரின் மனைவ... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம்! மாவட்ட முதன்மை நீதிபதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம் செயல்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் ஜூலை 14-இல் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத கைலாசநாதா் மற்றும் தட்சிணாமூா்த்தி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராம... மேலும் பார்க்க

குன்றத்தூா் அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

குன்றத்தூா் அடுத்த சிறுகளத்தூா் பகுதியில் டீசல் ஏற்றிவந்த டேங்கா் லாரி சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் பெட்ரோல் நிலையத்... மேலும் பார்க்க

விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.15.70 லட்சம் அபராதம் வசூலிப்பு

காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் விதிகளை மீறியதாக 220 வாகனங்களிடமிருந்து மொத்தம் ரூ.15.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க