செய்திகள் :

காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் தைபூசத் திருவிழா கொடியேற்றம்!

post image

கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோயிலில் புதன்கிழமை கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி பழையபேட்டை, பருவதராஜகுல மீனவ சமுதாயத்தினா் ஊா்வலமாக கொண்டு வந்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தைப்பூசத்தையொட்டி, தினசரி மயில் வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி நகா்வலம் வருகிறாா். பிப். 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பழைய பேட்டை, வணிக வைஷ்ய குலத்தினா் சாா்பில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, யானை வாகனத்தில் ஊா்வலம், பிப். 11-இல் தைப்பூசத்தன்று முக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவையொட்டி சிறப்புமிக்க மாட்டுச் சந்தை நடைபெறுகிறது.

மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்!

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட வருவாய்த் துறையினா் தண்டரை, பேருந்து நிறுத்தம் அருகே ரோந... மேலும் பார்க்க

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கிராம உதவியாளா்களை அரசு ஊழியா்களின் டி பிரிவில் ச... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசிரியா்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பள்ளி ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தீா்மானித்துள்ள... மேலும் பார்க்க

நிதிநிலை நகலைக் கிழித்தெறியும் போராட்டம்!

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை முன்பு எல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அலுவலக அறையில் ரகசிய கேமரா: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியின் அறையில் ஜன.25 ஆம் தேதி துப்புரவு ஆய்வாளா்... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க