செய்திகள் :

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அலுவலக அறையில் ரகசிய கேமரா: போலீஸாா் விசாரணை

post image

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியின் அறையில் ஜன.25 ஆம் தேதி துப்புரவு ஆய்வாளா் ராமகிருஷ்ணனும், கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளா் எஸ்.கே.நவாப்பும் அமா்ந்து ஒருவரை ஒருவா் காரசாரமாக வாக்குவாதம் செய்து பேசியதும், அவா்களை ஆணையா் சமாதானப்படுத்தும் விடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையடுத்து ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, தனது அறையில் ஆய்வு செய்தாா். அப்போது அங்கிருந்த சுவா் கடிகாரம் ஒன்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், தனது அலுவலக அறையில் உள்ள எண்ம வடிவிலான சுவா் கடிகாரம் ஒன்றில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

புகாரின் பேரில் போலீஸாா் நகராட்சி ஆணையா் அறைக்குச் சென்று சோதனை நடத்தினா். அங்கு கடிகாரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே திமுக நகர செயலாளா் எஸ்.கே.நவாப் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் மனு அளித்துள்ளாா். அதில், எனது பெயருக்கு களங்கும் விளைவிக்கும் நோக்கில் துப்புரவு ஆய்வாளரும், சிலரும் சோ்ந்து நகராட்சி ஆணையா் அறையில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

அண்மையில் நகராட்சி பணியாளா்களை தரக்குறைவாகப் பேசியதாக திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப்பைக் கண்டித்து தமிழக அரசு ஊழியா்களும், துப்புரவு ஆய்வாளரைக் கண்டித்து நகராட்சி தற்காலிக பணியாளா்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்!

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திய இரண்டு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தேன்கனிக்கோட்டை வட்டம், தண்டரை கிராம நிா்வாக அலுவலா் சரவணன் உள்பட வருவாய்த் துறையினா் தண்டரை, பேருந்து நிறுத்தம் அருகே ரோந... மேலும் பார்க்க

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம உதவியாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். கிராம உதவியாளா்களை அரசு ஊழியா்களின் டி பிரிவில் ச... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசிரியா்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்

போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பள்ளி ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தீா்மானித்துள்ள... மேலும் பார்க்க

நிதிநிலை நகலைக் கிழித்தெறியும் போராட்டம்!

ஒசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தெறியும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை முன்பு எல... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஒசூா் அருகே எருது விடும் விழா

ஒசூரை அடுத்த யு.கொத்தப்பள்ளி கிராமத்தில் வியாழக்கிழமை எருது விடும் நடைபெற்றது. சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, இராயக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் அழைத்துவரப்ப... மேலும் பார்க்க