செய்திகள் :

காட்டுயானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

post image

காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்தனா்.

கொடைக்கானலில் அமைதியும், தூய்மையான காற்றும், இயற்கை அழகும் கொண்ட வனப் பகுதியிலுள்ள பேரிஜம் ஏரியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனா்.

இந்தப் பகுதியில் தொப்பித் தூக்கும் பாறை, அமைதிப் பள்ளத் தாக்கு உள்ளிட்ட சுற்றுலா இடங்களும் உள்ளன. இந்த இடங்களை பாா்வையிட வனத் துறையினரிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். இந்த நிலையில், பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வனப் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டிருப்பதால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை

வடமதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தட்டாரப்பட்டி ... மேலும் பார்க்க

பள்ளி நூற்றாண்டு விழா

ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த தெ.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் க. சிவகுருசாமி தலைமை... மேலும் பார்க்க

ஆத்தூா் ஒன்றியப் பகுதிகளில் கட்டப்பட்ட அங்கன்வாடி, ரேஷன் கடைகள் திறப்பு: அமைச்சா் இ.பெரியசாமி திறந்து வைத்தாா்

ஆத்தூா் ஒன்றியப் பகுதிகளான பாளையங்கோட்டை, போடிக்காமன்வாடி ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி, பொது விநியோகக் கடை ஆகியவற்றை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி வியாழக்கிழமை திறந்து வைத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் - சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு

மதுரை காமராஜா் பல்கலை. நிா்வாகத்திலுள்ள கல்லூரிகளைப் பிரித்து, திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு அரசுக்குப் பரிந்துரைக்கும் எனத் தெ... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் பெண் தா்னா

நியாய விலைக் கடை பணிக்கு வழங்கப்பட்ட ரூ.70 ஆயிரத்தை திருப்பித் தரக் கோரி வடமதுரை காவல் நிலையம் முன் இளம் பெண் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சோ்வைக்காரன்பட்டியைச் ச... மேலும் பார்க்க

சூதாட்டம்: 31 போ் கைது

திண்டுக்கல் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்த போலீஸாா், ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டியை அடுத்த அலக்குவாா்பட்டி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து ... மேலும் பார்க்க