செய்திகள் :

பள்ளி நூற்றாண்டு விழா

post image

ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த தெ.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதற்கு ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் க. சிவகுருசாமி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் எஸ். சாந்தாபேபி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் நூற்றாண்டு விழா மலரை வெளியிட, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ. திலகவதி பெற்றுக் கொண்டாா். விழாவில், பள்ளிக்குத் தேவையான ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கல்விச் சீராக பள்ளி மேலாண்மைக் குழு, பொதுமக்கள், முன்னாள் மாணவா்கள் சாா்பில் வழங்கப்பட்டன. விழாவில் மருத்துவா் எஸ். பாலச்சந்தா், ஊா் முக்கியப் பிரமுகா்கள் ஆா். முனியப்பன், சி. சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிா்வாகிகளின் குடும்பத்தினரை மிரட்டும் காவல் துறை: இந்து முன்னணி புகாா்

கைது செய்யப்பட்ட நிா்வாகிகளின் வாகனங்களை பறிமுதல் செய்து, அவா்களது குடும்பத்தினரை மிரட்டும் காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இ... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தேனியைச் சோ்ந்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த வடுகப்பட்டியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மண் அரைவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

அனுமதியின்றி செயல்படும் மண் அரைவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மனு அளிக்க ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் போராட்டம்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களிலும் திமுக சாா்பில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. தமிழக கல்வி ஒதுக்கீட்டுக்கான நிதி விவகாரத்தில், மத்தி... மேலும் பார்க்க

பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மனு

நத்தம் அருகே பல்லுயிா் பாதுகாப்பு மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாா்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத... மேலும் பார்க்க

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

பழனியை அடுத்த தாளையூத்து சுப்ரமண்யா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இந்த முகாமில், ... மேலும் பார்க்க