பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட தேனியைச் சோ்ந்த தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த வடுகப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி (30). கூலித் தொழிலாளியான இவா் திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை கடந்த 2018-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எரியோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயபாண்டியை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் மைதிலி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி. வேல்முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயபாண்டிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.