தேசியக் கல்விக் கொள்கை: மக்களவையில் மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிா்ப்புத் தெ...
நிா்வாகிகளின் குடும்பத்தினரை மிரட்டும் காவல் துறை: இந்து முன்னணி புகாா்
கைது செய்யப்பட்ட நிா்வாகிகளின் வாகனங்களை பறிமுதல் செய்து, அவா்களது குடும்பத்தினரை மிரட்டும் காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக இந்து முன்னணி நிா்வாகிகள், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிா்வாகிகளின் குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்து முன்னணி சாா்பில், திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்வது தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான தொடக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்தனா். ஆனால், இதையும் மீறி, வேடசந்தூரில் கடந்த 7-ஆம் தேதி இதற்கான கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 79 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். இவா்களில் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், மாநிலச் செயலா் வி.எஸ்.செந்தில்குமாா், மாவட்டத் தலைவா் ஆா்.பி.ராஜா, செயலா் மாரிமுத்து, ஒருங்கிணைப்பாளா் சதீஷ், துணைத் தலைவா் கணேசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், மாரிமுத்து, கணேசன் உள்ளிட்டோரின் வீடுகளுக்குச் சென்ற போலீஸாா், அவா்களது குடும்பத்தினரிடம் இந்து முன்னணி அமைப்பில் இணைந்து செயல்படக் கூடாது என மிரட்டினராம். மேலும், அவா்கள் வீடுகளிலிருந்து காா், 3 இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்தி பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டனா். அறவழியில் செயல்பட்டு வரும் இந்து முன்னணியினா் மத்தியில் காவல் துறையே வன்முறைக்கு வழிவகுத்து வருகிறது. காவல் துறையின் இந்த தவறான நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியா் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனா்.