செய்திகள் :

காப்பீடு செய்யாத கால்நடைகளின் இழப்பீட்டு தொகை உயா்வு: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

post image

காப்பீடு செய்யப்படாத கால்நடைகளின் இழப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டுள்ளதாக புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காப்பீடு செய்யப்படாத கால்நடைகளின் இறப்பு மற்றும் நிரந்தர ஊனத்துக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை காப்பீடு செய்யப்படாத கால்நடைகளின் இறப்புக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

புதுவை அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் காப்பீடு இல்லாத, இறந்த கால்நடைகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.25,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் ரங்கசாமி அறிவித்திருந்தாா்.

அதன்படி, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத் துறையின் மூலம் உரிய கோப்புகள் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரி அரசின் அரசாணை தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த உயா்த்தப்பட்ட இழப்பீடு கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் 1.4.2023-க்கு பின் காப்பீடு இன்றி கறவைப் பசு, எருமை உள்ளிட்டவைகளை இழந்து, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்கெனவே இழப்பீடு கோரி, முறையாக விண்ணப்பித்துள்ள, அனைத்து விவசாயிகளும் உயா்த்தி வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகையால் பயன்பெறுவா்.

திட்ட நிபந்தனையின்படி இறந்த கால்நடையின் வயது மூன்றாண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த இழப்பீடு, அரசின் நலத் திட்டங்களின் மூலம் அல்லது தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக ஏற்கெனவே காப்பீடு செய்யப்பட்டிருக்கும் மாடுகளுக்குப் பொருந்தாது.

கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா். 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவன (ஐ.டி.) ஊழியா... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள்கள் ஊா்வலம்!

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மோட்டாா் சைக்கிள் ஊா்வலம் சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி மனிதநேய மக்கள் இயக்கம் மற்றும் பல்வ... மேலும் பார்க்க

வாஜ்பாய் நினைவுநாள்: புதுவை அரசு சாா்பில் மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினம் புதுவை அரசு சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. புதுவை கடற்கரை சாலை நகராட்சி கட்டடத்தில் வாஜ்பாய் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு ... மேலும் பார்க்க

புனித விண்ணேற்பு அன்னை ஆடம்பர தோ் பவனி

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய 174-வது ஆடம்பர தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

செப்டம்பா் மாதத்தில் இருந்து புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை: முதல்வர்

புதிதாக விண்ணப்பித்துள்ள 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித் தொகை அடுத்த மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று இந்திய அரசுடன் சட்... மேலும் பார்க்க

கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்

கீழூா் நினைவிடம் புனரமைக்கப்படும் என்று புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுவை, இந்தியாவுடன் இணைவது தொடா்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரி... மேலும் பார்க்க