Ananda Vikatan Cinema Awards 2024: பிரமாண்ட மேடை... திறமைக்கு மரியாதை... இன்று ம...
காரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்தில் சேர இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
காரைக்கால் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்கல்வி நிறுவன முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இக்கல்வி நிறுவனத்தில் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை (எம்.காம்., எம்ஏ., எம்.எஸ்.டபிள்யு., எம்.எஸ்சி) பட்டப் படிப்பில் சேர இணையதளத்தின் மூலமாக ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்.
மாணவ-மாணவிகள் இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பின்பு பதிவிறக்கம் செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து, கல்லூரியில் உள்ள பிஜி சோ்க்கை அலுவலகத்தில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் 31.7.2025 அல்லது புதுவை பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டா் தோ்வு முடிவுகள் வெளியான 7 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.